No results found

    வைத்தியநாதசாமி கோவிலில் மண்டலாபிஷேக கிருத்திகை வழிபாடு


    வைத்தீஸ்வரன் கோவிலில் தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்திய நாதசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் தனி சன்ன தியில் செல்வமுத்துக்கு மாரசுவாமி, அங்காரகன், தன்வந்திரி ஆகிய சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலில் மண்டலா பிஷேக கிருத்திகையை யொட்டி செல்வமுத்துக்கு மாரசுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. கிருத்திகை மண்டபத்தில் எழுந்தருளிய வள்ளி, தெய்வானை உடனாகிய செல்வமுத்து க்குமார சுவாமிக்கு மஞ்சள், திரவியபொடி, பால்,தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் முதலான 21 வகையான நறுமன திரவிய பொருட்க ளால் சிறப்பி அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்கள், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு சண்முகார்ச்சனை செய்து மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று தரிசனம் செய்து பக்த ர்களுக்கு பிரசாதங்களை வழங்கினார்.

    Previous Next

    نموذج الاتصال